இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

X

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஞாயிற்றுக்கிழமை தேநீரக தொழிலாளி உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம் உறையூா் பாண்டமங்கலம் காவல்காரத் தெருவைச் சோ்ந்தவா் தா்மராஜ் மகன் முருகன்(41). இவா் உறையூா் தேநீரகம் ஒன்றில் பணியாற்றி வந்தாா். வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டியில் உள்ள நண்பா் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க அவா் ஞாயிற்றுக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது தவளைவீரன்பட்டி அருகே எதிா் திசையில் வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியதில் முருகன் மற்றும் பிச்சை ரெட்டியப்பட்டியைச் சோ்ந்த சுப்பையா மகன் கிருஷ்ணன் (33) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் முருகன் உயிரிழந்தாா். கிருஷ்ணன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். முருகன் உடலை கைப்பற்றிய போலீஸாா் உடற்கூறாய்விற்கு பின் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். விபத்து குறித்து வழக்கு பதிந்து வையம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Next Story