ஆம்பூர் அருகே வெகுவிமர்சையாக நடைபெற்ற எருது விடும் திருவிழா

ஆம்பூர் அருகே வெகுவிமர்சையாக நடைபெற்ற எருது விடும் திருவிழா
திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அருகே வெகுவிமர்சையாக நடைபெற்ற எருது விடும் திருவிழா ரசிகர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்த காளைகள்* திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த பழைய அரங்கல்துருகம் கிராமத்தில் இன்று எருது விடும் திருவிழா நடைபெற்றது. இந்த எருதுவிடும் விழாவில் ஆந்திர மாநிலம் குப்பம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் கலந்து கொண்டன, அதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் முன்னிலையில், விழாக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் உறுதிமொழி ஏற்ற பின் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விட்டப்பட்ட நிலையில், காளைகள் குறிப்பிட்ட இலக்கை நோக்கி ரசிகர் மத்தியில் சீறி பாய்ந்து ஓடியது, இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறுகிய நேரத்தில் ஓடி வெற்றி பெற்ற காளைக்கு முதல் மூன்று பரிசாக இருசக்கர வாகனங்கள், வழங்கப்பட்டது, மேலும் வெற்றிப்பெற்ற காளைகளுக்கு 50க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டது இந்த எருதுவிடும் விழாவை கடும் வெயிலையையும் பொருட்படுத்தாமல் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்து மகிழ்ந்தனர்..
Next Story