கத்தேரி மேம்பாலத்தில் வாகனங்கள் விட்டு வெள்ளோட்டம்

X
Komarapalayam King 24x7 |17 March 2025 7:07 PM ISTகுமாரபாளையம் கத்தேரி மேம்பாலத்தில் வாகனங்கள் வெள்ளோட்டம் விடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கத்தேரி மேம்பாலத்தில் வாகனங்கள் விட்டு வெள்ளோட்டம் குமாரபாளையம் கத்தேரி மேம்பாலத்தில் வாகனங்கள் வெள்ளோட்டம் விடப்பட்டது. குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி நவ. 2023ல் துவங்கியது. 2023, டிச. 8ல், அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன. 17 மாதங்களுக்கு பின், மேம்பாலம் பணிகள் ஓரளவு முடிக்கப்பட்டு, சேலம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள், கோவை நோக்கி செல்லும் பாதையில் மேம்பாலம் வழியாக வெள்ளோட்டம் விடப்பட்டன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சில நாட்களில் கோவை பக்கமிருந்து வரும் வாகனங்களும் சேலம் நோக்கி செல்லும் பாதையில் விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சர்வீஸ் சாலையில் வாகன நெரிசல் குறைந்துள்ளது.
Next Story
