தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தங்கள் சமுதாயத்திற்கு சேர்ந்த நிலத்தை பிறர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி நூற்றுக்கு மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியிடம் மனு ..

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் எஸ். குமாரலிங்காபுரத்தில் வசிக்கும் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தங்கள் சமுதாயத்திற்கு சேர்ந்த நிலத்தை பிறர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி நூற்றுக்கு மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியிடம் மனு .... விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே எஸ் ராமலிங்கபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் .இதில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த 50குடும்பங்களும் ஆதிதிராவிட மற்றும் பறையர் சமூகத்தைச் சேர்ந்த 150 குடும்பங்களும் வசித்து வருகின்றனர் இந்த இரு சமுதாயத்திற்கும் சொந்தமாக நத்தம் புறம்போக்கு நிலத்தில் சுமார் ஒரு ஏக்கர் மற்றும் 5 செண்ட் நிலம் உள்ளது. இதில் 5 சென்ட் நிலத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு சொந்தமான வலம்புரி விநாயகர் கோவிலும் அதற்கு அருகில் அவர்களுக்கு சொந்தமான கிணறும் உள்ளது. இதே போல் ஆதிதிராவிடர் மற்றும் பறையர் சமூகத்திற்கு சொந்தமான வடக்கத்தி அம்மன் கோவில் மற்றும் கிணறு உள்ளது. ஆனால் ஆதிதிராவிடர் மற்றும் பறையர் சமூகத்தைச் சேர்ந்த கிராம மக்கள் அதிகமாக இருக்கும் காரணத்தினால் நத்தம் புறம் போக்கு நிலத்தில் உள்ள தங்களுக்கு சொந்தமான 5 செண்ட் நிலத்தையும் அபகரிக்கும் முயற்சியாக தங்களுக்கு சொந்தமான கிணற்றில் ஆதிதிராவிடர் மற்றும் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மலம் கழிப்பது, சிறுநீர் கழிப்பது, குப்பைகளை கொட்டுவது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் இது சம்பந்தமாக ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் பலமுறை மனு குடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக் கவில்லை என்றும் மேலும் தங்களுக்கு சொந்தமான ஐந்து செண்ட நிலத்திற்கு பட்டா கேட்டும் பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்று கூறி, இன்று தேவேந்தி குலவேளாரர் சமுதாயத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு எதிராக செயல்படும் ஆதிதிராவிடர் மற்றும் பறையர் சமூகத்தை சேர்ந்தவர்களை முறையாக விசாரித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் நத்தம் மறம்போக்கில் உள்ள 5 செண்ட் நிலத்தை தாங்கள் 100 ஆண்டுகளாக அனுபவ பாத்தியமாக இருப்பதால் அந்த இடத்திற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க பட்டா வேண்டும் என்று கூறி இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்
Next Story

