பரமத்தி வேலூர் அருகே சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி.

பரமத்தி வேலூர் அருகே சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி.
X
பரமத்தி வேலூர் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 இளைஞர்கள் பலி.
பரமத்திவேலூர், மார்ச்.17: பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 இளைஞர்கள் பலியானது குறித்து வேலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகி்றனர். பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம், திரெளபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மலையாளி மனைவி பிரியா (38). இவர்களுக்கு தமிழரசன் (20). தமிழரசன் சனிக்கிழமை பரமத்தி வேலுார் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல பாண்டமங்கலம் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பொத்தனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது பாண்டமங்கலத்தில் இருந்து பரமத்தி வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த‌ மற்றொரு இரு சக்கர வாகனம் ஒன்று தமிழரசன் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது‌ நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய தமிழரசன் மற்றும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்தவரையும் அப் பகுதியில் இருந்தவர்கள் காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். படுகாயம் அடைந்த இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர் தமிழரசனும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்தவரும் வரும் வழியிலியே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்தவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாலகுண்டம் வடக்கு தெருவைச் சேர்ந்த சின்னசாமி மகன் பாலாஜி (21) என்பது தெரியவந்தது. பாலாஜி எதற்காக இங்கு வந்தார், எங்கு சென்று விட்டு பரமத்தி வேலூர் நோக்கி வந்தார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தில் பலியான இருவரது உடல்களையும் வேலூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக சேர்த்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story