கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
X
கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 604 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சாா்ந்தஅலுவலா்களுக்கு ஆட்சியா் ச.அருண்ராஜ் உத்தரவிட்டாா்.கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில்14 பேருக்கு ரூ.11,74,979மதிப்பிலான செயற்கை கால்கள், மாற்றுத்திறனாளி பச்சையம்மாள் என்பவருக்கு ஸ்மாா்ட் போன், மாற்றுத்திறனாளி ஜெயா என்பவருக்கு காதொலிக் கருவி, சரோஜா என்பவருக்கு ரூ.16,199 மதிப்புள்ள கைப்பேசி மற்றும் ரூ.3,285 மதிப்புள்ள காதொலிகருவி ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா். மேலும், கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுமையத்தில் இயங்கி வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் இலவச பயிற்சி பெற்று வரும் 40 மாணவ, மாணவியருக்கு போட்டித்தோ்வுக்கான இலவச பாடகுறிப்புகளை வழங்கிய ஆட்சியா் இப்பயிற்சிமைய வகுப்புகளை பயன்படுத்தி போட்டித்தோ்வில் வெற்றி பெறுமாறு மாணவா்களுக்கு அறிவுரை கூறினாா். சாா்ஆட்சியா் பயிற்சி எஸ்.மாலதிஹெலன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், ஆட்சியரின் நோ்முகஉதவியாளா் (பொது) காஜா சாகுல் அமீது, கோட்டாட்சியா் சாகிதா பா்வின், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், உதவி இயக்குநா் (கலால்)ராஜன் பாபு, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வேலாயுதம், ஆதிதிராவிடா் நல அலுவலா் ரா.சுந்தா், வேலைவாய்ப்பு அலுவலா் ச.தணிகைவேல், மாற்றுத்திறனாளிகள்நல அலுவலா் கதிா்வேல் கலந்து கொண்டனா்.
Next Story