தமுமுக சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் (எ)நோன்பு திறப்பு நிகழ்ச்சி.

ஆரணி கார்த்திகேயன் சாலையில் தமுமுக சார்பில் மாபெரும் சமூக நல்லிணக்க இஃப்தார் என்கிற நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆரணி கார்த்திகேயன் சாலையில் தமுமுக சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை மாபெரும் சமூக நல்லிணக்க இஃப்தார் என்கிற நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றதில் தமுமுக நகர தலைவர் ஏ.ஜீலான் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக தலைமை கழக பேச்சாளர் கோவை சையது, தலைமை பிரதிநிதி அச்சரப்பாக்கம் ஷாஜகான் ஆகியோர் இஃப்தார் நோன்பு குறித்து சிறப்புரையாற்றினர். தமுமுக மாவட்ட தலைவர் எச்.ஜமால், மமக மாவட்டச் செயலாளர் ஏ.நசீர்அகமத், தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல்ரஹீம், மாவட்ட பொருளாளர் ஐ.யூனூஸ்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் திமுக சார்பில் நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி, தொகுதி செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகி அப்பாசாமி, காங்கிரஸ் நகர மன்ற உறுப்பினர் ஜெயவேலு, விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் ந.முத்து, ஆரணி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கஞ்சி குடித்தனர். முடிவில் நகர நிர்வாகிகள் இ.எஸ்.பி.ஆசிப், இ.எஸ்.பி ஆரிப் நன்றி கூறினர்.
Next Story