ராமநாதபுரம் கடலோர மீனவப் பெண்களுக்கு பயிற்சி அளிப்பு

அமிர்தா பல்கலைக்கழகம் 'ப்ளூ இஸ் தி நியூ பிங்க் கடற்பாசி சாகுபடி மூலம் கடலோர பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது
ராமநாதபுரம் அமிர்தா பல்கலைக்கழகம் 'ப்ளூ இஸ் தி நியூ பிங்க் ' கடற்பாசி சாகுபடி மூலம் கடலோர பெண்களுக்கு ஆதரவு கோவை அமிர்தா பல்கலைக்கழகம் அதன் AMMACHI ஆய்வகங்கள் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவ மையத்தின் மூலம் "ப்ளூ இஸ் தி நியூ பிங்க்" முயற்சியினை கடலோரம் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட முயற்சியானது கடல் பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்வாதாரங்களில் பெண்களைப் பங்களிக்க செய்து, காலநிலை மீன் தன்மை மற்றும் பொருளாதார சுதந்திரத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது. இம்முயற்சியின் முக்கிய பகுதியாக அமிர்தா பல்கலைக்கழகம் சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சம்பை, ஓலைக்குடா, திருப்பாலைக்குடி , தொண்டி மற்றும் சோழியங்குடி ஆகிய ஐந்து கிராமங்களை சேர்ந்த 115 பெண்களுக்கு அத்தியாவசிய கடற்பாசி சாகுபடிக்கான உபகரணங்களை விநியோகித்தது. 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கடல்பாசி வளர்ப்புப் பயிற்சி திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழலுக்கு உகந்த கடல் சார் நிறுவனங்களை நிறுவுவதற்கு தேவையான திறன்கள், கருவிகள் மற்றும் சந்தை அணுகலை பெண்களுக்கு வழங்குவதை முக்கிய நோக்கங்களாக கொண்டுள்ளது. கடற்பாசி சாகுபடியில் ஏற்கனவே 64 க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி பெற்ற நிலையில் இந்த முயற்சியானது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. இந்த மாதம் பல பெண்கள் 1500 கிலோவிற்கு மேலான கடற்பாசியை வெற்றிகரமாக சாகுபடி செய்துள்ளனர். கடல் சார்ந்த தொழில்களை மேம்படுத்துகிறது. இந்த திட்டத்திற்கு ஒரு மதிப்பு மிக்க மானியமும் கிடைத்துள்ளது. மார்ச் 8, 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விநியோக நிகழ்வுகளில் பாதுகாப்பு மற்றும் செயல் திறனை மேம்படுத்த லைஃப் ஜாக்கெட்டுகள், நீருக்கடியில் கண்ணாடிகள், மீன்வலைகள், கயிறுகள், கத்திகள் மற்றும் பிற அத்தியவாசிய கருவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுகளை இயக்குநர் ஸ்ரீ வித்யா சேஷாத்ரி தொடங்கி வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் மீன்வளத்துறை இயக்குநர் (DDF) பிரபாவதி சிறப்புரையாற்றினார். மேலும் அமிர்தா வித்யாலயம் மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமி அம்மா, கள ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், AMMACHI சிபிமி ஆய்வகங்களைச் சேர்ந்த பிரம்மச்சாரிணி, அமிர்தா பானு மற்றும் அஸ்வதி ஆகியோர் இந்த முயற்சியை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தனர். 2024 ஆம் ஆண்டு ஏப்ரலில் 1290 கிலோ கடற்பாசி சாகுபடி இணைச் செய்து சாதனை படைத்த இந்த முயற்சியானது, பெண்கள் முன்னேற்றம், கடல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்கான அமிர்தா பல்கலைக்கழகத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. கடல்பாசி சார்ந்த தயாரிப்புகளுக்கான உலகளாவிய தேவை தொடர்ந்து வளர்ந்து வருவதால் "ப்ளூ ஈஸ் தி நியூ பிங்க்" முயற்சியானது பெண்களின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் பசுமையான எதிர்காலத்திற்கான நிலையான கடல் சார்ந்த விவசாய நடைமுறைகளையும் ஊக்குவிக்கிறது.
Next Story