காட்டுப்பாக்கத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட முகாம்!

X
ராணிப்பேட்டை மாவட்டம் காட்டுப்பாக்கம் கிராமத்தில் இன்று தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட முகாம் நடைபெற்றது இதில் மேல்களத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இலவச ஆலோசனைகள் வழங்கினர். குறிப்பாக நாள் பட்ட சளி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றும் இதுவே காச நோயின் அறிகுறிகளாக இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
Next Story

