திருவேங்கடம் பகுதிகளில் இன்று திடீர் கனமழை

திருவேங்கடம் பகுதிகளில் இன்று திடீர் கனமழை
X
திருவேங்கடம் பகுதிகளில் திடீர் கனமழை
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் சுற்றுவட்ட பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்தது இந்த நிலையில் திடீரென்று குளிர்ந்த காற்று வீசி கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழையால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story