ராமநாதபுரம் கரை ஒதுங்கிய இரண்டு இலங்கை மீனவர்கள் போலீசார் விசாரணை

தொண்டி கடற்கரை அருகே ஃபைபர் படகுடன் கரை ஒதுங்கி இரு இலங்கை மீனவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீன் பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் ஒரு நாட்டிகள் தூரத்தில் நடுக்கடலில் பைபர் படகில் இலங்கை மீனவர்கள் இருவர் தத்தளிப்பதாக மரைன் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரையும் மீட்டு கரைக்கு அழைத்துச் வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கடந்த 15ஆம் தேதி யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று எஞ்சின் பழுது காரணமாக கடலில் தத்தளித்த ஞானராஜ் மற்றும் பூலோக தாசன் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மீனவர்கள் தத்தளித்த கடற்பகுதியில் ஒரு மூட்டையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததால் அவர்கள் இருவருக்கும் கஞ்சா பொட்டலங்களுக்கும்  தொடர்பு உள்ளதா என்பது என்ற கோணத்தில் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story