ஜனவரியில் முடிக்க வேண்டிய மேம்பாலத்தை மார்ச் வந்தும் முடிக்காததால் ஆட்சியர் விளாசல்

ஜனவரியில் முடிக்க வேண்டிய மேம்பாலத்தை மார்ச் வந்தும் முடிக்காததால் உங்களுக்கு அபராதம் விதித்தால் என்ன, அடுத்த முறை முதலமைச்சர் வருவதற்குள் மேம்பாலம் திறப்பதற்கு தயாராக இல்லை என்றால் உங்களை பிளாக் லிஸ்டில் போட்டு விடுவேன் என விளாசிய ஆட்சியர்
திருவள்ளூர் ஜனவரியில் முடிக்க வேண்டிய மேம்பாலத்தை மார்ச் வந்தும் முடிக்காததால் உங்களுக்கு அபராதம் விதித்தால் என்ன. அடுத்த முறை முதலமைச்சர் வருவதற்குள் மேம்பாலம் திறப்பதற்கு தயாராக இல்லை என்றால் உங்களை பிளாக் லிஸ்டில் போட்டு விடுவேன் என விளாசிய ஆட்சியர். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சிறுவானூர் பகுதியில் உள்ள அரசு நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர். பொருட்கள் இருப்பில் அதிகமாகவும். கணக்கில் குறைவாகவும் உள்ளதாக கேட்ட கேள்விக்கு திரு திருவென விழித்த பெண் விற்பனையாளர். இதே போல் நெமிலிஅகரம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் ₹ 13. 60 லட்சம் மதிப்பிலான மேம்பாலத்தை ஆய்வு செய்த போது தரம் மற்றும் உயரம் உள்ளிட்டவைகளை சோதனை செய்ய எந்த உபகரணங்களும் எடுத்து வராத அதிகாரிகளை பார்த்து எதற்காக எந்த பொருட்களும் இல்லாமல் என் பின்னாலேயே வருகிறீர்கள் வெறும் கையை வீசிக்கொண்டு வருவதற்கு நீங்கள் எதற்கு. அதற்கு நானே பார்த்துக் கொண்டு வருவேனே என அதிகாரிகளை விளாசிய ஆட்சியர் இதை அடுத்து ஒப்பந்ததாரரை கம்பிகளின் தடிமன் மற்றும் உயரம் உள்ளிட்டவைகளை அளக்கச் சொல்லி ஒப்பந்த காலம் முடிந்தும் இன்னும் பணிகள் முடிவடையாததால் உங்களுக்கு அபராதம் விதித்தால் என்ன என எழுப்பிய கேள்விக்கு விழி பிதுங்கி முழித்த ஒப்பந்ததாரர் அடுத்த முறை முதலமைச்சர் வருவதற்குள் இந்த மேம்பாலம் தயாராக இருக்க வேண்டும் இல்லையென்றால் உங்களை பிளாக் லிஸ்டில் போட்டு விடுவேன் என கோப முகம் காட்டு சென்ற ஆட்சியர். இதை அடுத்து பூண்டி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மருந்தகத்தில் எவ்வளவு மருந்துகள் இருப்பு உள்ளது என ஆய்வு மேற்கொண்ட போது நோட்டுப் புத்தகத்தில் 2000 உள்ளதாக கணக்கு எழுதி வைத்திருந்த நிலையில் அதை பார்த்துவிட்டு அனைத்தும் சரியாக உள்ளதா என மருந்தக பொறுப்பாளரை கேட்டபோது சரியாக உள்ளது என பெண் பொறுப்பாளர் சொல்ல மாத்திரைகளை ஆய்வு செய்தபோது 6000-க்கும் மேற்பட்ட மருந்துகள் இருப்பு உள்ளதால் திடீரென கடுப்பான ஆட்சியர் இருப்பு ஆறாயிரத்திற்கு மேல் உள்ளது ஆனால் கணக்கில் 2000 மட்டுமே எழுதி வைத்துள்ளீர்கள் அனைத்தும் சரியாக தான் உள்ளதா அல்லது மாத்திரைகள் வெளியே எங்கேயும் விற்பனைக்கு செல்கிறதா என கேள்வி எழுப்பிய நிலையில் பெண் மருந்தகப் பொறுப்பாளர் ஒரு நிமிடம் பயத்தின் உச்சிக்கு சென்று முகம் வாடி போய் நின்று பதில் அளிக்க முடியாமல் திணறினார் இதை அடுத்து மருத்துவமனைக்கு வெளியே வந்து கழிவறைகளை பார்த்து இந்த கழிவறைகள் ஏன் இப்படி உள்ளது உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டும் என மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Next Story