காசநோய் விழிப்புணர்வு பேரணி

X
Komarapalayam King 24x7 |20 March 2025 8:44 PM ISTகுமாரபாளையத்தில் காசநோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உலக காசநோய் தினத்தையொட்டி, அரசு மருத்துவமனை சார்பில் காசநோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது. குமாரபாளையம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பாரதி தலைமை வகித்து, கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். ராஜம் தியேட்டர் முன்பு துவங்கி, குமாரபாளையத்தில் முக்கிய சாலைகளின் வழியாக சென்ற பேரணி, பஸ் ஸ்டாண்ட்டில் நிறைவு பெற்றது. இதில் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர் காசநோய் குறித்த விழிப்புணர்வு கோஷங்கள் போட்டவாறும், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தவாறும் வந்தனர். மாவட்ட காசநோய் அலுவலக நலக்கல்வியால்ர் ராமசந்திரன், உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
