ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை பக்தர்கள் சாமி தரிசனம்..

ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை பக்தர்கள்  சாமி தரிசனம்..
X
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை பக்தர்கள் சாமி தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள், மற்றும் அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும் அதன்படி பால், தயிர், மஞ்சள், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் வெள்ளி காப்பு மலர் அலங்காரத்தில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
Next Story