பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்கு மினி பஸ் வசதி ஏற்படுத்தி தர

X
தமிழக அரசின் சிற்றுந்து புதிய விரிவாக்க திட்டத்தின் கீழ், பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்கு மினி பஸ் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகை வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு மினி பஸ் வழங்கும் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியராக அறிவிக்கப்பட்ட வழித்தடங்களி மினி பஸ் இயக்க பெறப்பட்ட 56 விண்ணப்பங்களில் 25 விண்ணப்பதாரர்களுக்கு, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், அனுமதி சீட்டுக்கான செயல்முறை ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

