சேலம் அழகாபுரம் பகுதியில் பட்டறையில் கார் திருட்டு

சேலம் அழகாபுரம் பகுதியில் பட்டறையில் கார் திருட்டு
X
போலீசார் விசாரணை
சேலம் கிச்சிப்பாளையம் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 47). இவர் அழகாபுரம் பஞ்சவர்ணம் நகரில் கார் பட்டறை வைத்துள்ளார். வினோத்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டறையில் காரை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் அவர் மீண்டும் பட்டறைக்கு சென்றார். அப்போது அங்கு கார் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காரை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் குறித்து வினோத்குமார் அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story