கரப்பாளையம் பிரிவு சாலையில் நடந்து சென்றவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு.

கரப்பாளையம் பிரிவு சாலையில் நடந்து சென்றவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு.
கரப்பாளையம் பிரிவு சாலையில் நடந்து சென்றவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு. திருவண்ணாமலை மாவட்டம், கீழப்பொன்னாத்தூர் தாலுக்கா, கொளத்தூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் வயது 40. அதே பகுதியைச் சேர்ந்தவர் பாண்டு வயது 40. இவர்கள் இருவரும் டிபிசி இன்பரா கம்பெனியில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் மார்ச் 20 ஆம் தேதி இரவு 9 மணி அளவில், கரூர் - கோவை சாலையில் இவர்கள் இருவரும் நடந்து சென்றனர். அப்போது கரப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, வேகமாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் ஒன்று நடந்து சென்ற இருவர் மீதும் பலமாக மோதி விட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இதில் முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல பாண்டு வுக்கு பின்னந்தலையில் அடிபட்டு அவர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அறிந்த முருகனின் மனைவி சாருமதி வயது 29 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த முருகன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? அந்த வாகனத்தின் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தென்னிலை காவல் துறையினர்
Next Story