மீனாட்சி அம்மன் கோவிலில் கோடை உற்சவம்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் கோடை வசந்த உற்சவம் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 10 வரையிலும் நடைபெறுகிறது. அந்நாள் முதல் தினந்தோறும் மாலை சுவாமி மற்றும் அம்பாள் சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உள்ள வெள்ளியம்பல மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. நிறைவு நாளான ஏப்ரல் 10ம் தேதி காலை சுவாமி அம்பாள் சிம்மாசனத்தில் எழுந்தருளி அங்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை முடிந்து, மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் திருக்கோயில் வந்தடைவார். ஏப்ரல் 11ம் தேதி காலை பங்குனி உத்திரத்தன்று, சுவாமி சுந்தரேஸ்வரர் குதிரை வாகனத்திலும் அன்னை மீனாட்சி சிம்மாசனத்தில் எழுந்தருளி செல்லூர் திருவாப்புடையார் கோயிலுக்கு எழுந்தருளி, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை முடிந்து, மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி, கோயில் வந்து, பின் சுவாமி சன்னதி பேச்சிக்கால் மண்டபத்தில் தீபாராதனை நடைபெறுகிறது ஏப்ரல் 16ம் தேதி தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு, வண்டியூர் மாரியம்மன் மின் அலங்காரம் செய்யப்பட்ட பூப்பல்லாக்கில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அம்மன் சன்னதி முன் புறப்படுகிறார். மாசிவீதிகள், காமராஜர் ரோடு வழியாக தெப்பக்குளம் கோயிலுக்கு வந்து சேரும். பின், மாரியம்மனுக்கு பூச்சொரிதலும், தீபாராதனையும் நடக்கும். அம்மன் செல்லும் வீதிகளில் மலர், மாலைகளை காணிக்கையாக மக்கள் வழங்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story



