பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை.

X
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில் மாசி மாதம் தேய்பிறை அஷ்டமி த்ரியம்பகாஷ்டமி, காலபைரவர் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அர்ச்சனை அலங்கார வழிபாடு நடைபெற்றது. இன்று (மார்ச்.22) மாலை அருள்மிகு காலபைரவர், சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனப்பொடி, பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. அருள்மிகு காலபைரவர் சுவாமிக்கு வண்ண வண்ண, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தார். பக்தர்களுக்கு தயிர் சாதம், உளுந்த வடை, அபிஷேக பால், பஞ்சாமிர்தம், பிரசாதம் வழங்கப்பட்டது
Next Story

