சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழையால் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலைகளில் ஓடியதால் வாகன ஓட்டிகள்,பள்ளி மாணவ மாணவிகள் அவதி.,நோய் தொற்று பரவும் அபாயம்..*

சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழையால் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலைகளில் ஓடியதால் வாகன ஓட்டிகள்,பள்ளி மாணவ மாணவிகள் அவதி.,நோய் தொற்று பரவும் அபாயம்..*
X
சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழையால் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலைகளில் ஓடியதால் வாகன ஓட்டிகள்,பள்ளி மாணவ மாணவிகள் அவதி.,நோய் தொற்று பரவும் அபாயம்..*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழையால் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலைகளில் ஓடியதால் வாகன ஓட்டிகள்,பள்ளி மாணவ மாணவிகள் அவதி.,நோய் தொற்று பரவும் அபாயம்.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தொடர்ச்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெய்த தொடர் மழை இன்றும் தொடர்ந்தது. காலையிலிருந்து வானம் மேகமூட்டமாக காணப்பட்டது ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதியானது பிற்பகலில் அடர்ந்த மேகமாக மாறி சுமார் ஒரு மணி நேரம் கன மழையாக கொட்டி தீர்த்தது.ஏற்கனவே தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்து இருந்த நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியான மல்லி, பாட்டக்குளம், வன்னியம்பட்டி, கிருஷ்ணன் கோவில் உள்ள பகுதியில் ஒரு மணி நேரம் கன மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் நகர் பகுதிகள் முழுவதும் வாறுகால்கள் தூர்வாரததால் அடைப்புகள் ஏற்பட்டு மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து சாலைகள்,பள்ளி அருகே உள்ள தெரு பகுதிகள் முழுவதும் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பள்ளி முடிந்து வந்த மாணவ மாணவிகள் சாக்கடை நீரில் நடந்து சென்று அவதிக்குள்ளாகினர் மேலும் வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்தனர் இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் அரசின் மாவட்ட நிர்வாகம் கவனம் கொண்டு நகராட்சி நிர்வாகத்திற்க்கு ஆணையிட்டு நகர் பகுதிகள் முழுவதும் உள்ள வாறுகால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story