பெண்மணிகளாக சமுதாயத்தில் விளங்க வேண்டும்

அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு
அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி.கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப அவர்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி இன்று 22.03.2025-ம் தேதி பள்ளியின் தலைமையாசிரியர் திரு.சிவக்குமார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மருதமுத்து, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மருத்துவர் Dr.திருமதி.வனிதா , மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகர் திருமதி.தென்றல் மற்றும் மீரா ஃபவுண்டேசன் திரு.ராஜாமுகமது
ஆகியோர்கள் இணைந்து கல்பாடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம் தடுப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்கள் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் மாணவ மாணவிகள் செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் உங்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் மேலும் இன்ஸ்டாகிராம், ஷேர் ஷாட், பேஸ்புக், டெலிகிராம், டிக்டாக், மற்றம் ஸ்னாப் ஷாட், போன்ற ஆப்களை பயன்படுத்தினால் உங்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் இந்த ஆப்களை பயன்படுத்துவதற்கு பதிலாக காவல் உதவி ஆப் பயன்படுத்தினால் அது உங்கள் வாழ்க்கையை பாதுகாக்கும் உங்கள் வாழ்க்கையில் சிறந்த பெண்மணிகளாக சமுதாயத்தில் விளங்க வழிவகுக்கும். மேலும் போதைப்பொருட்களுக்கு அடிமையாதல் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் மற்றும் உயிரிழப்புகள் ஆகியவை குறித்து மாணவர்களிடம் விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். மேலும் ஒவ்வொரு காவல்நிலையத்திலும் செயல்படும் இலவச புகார் எண்களான Women Help Desk 112 குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 முதியோர் உதவி எண்கள் 14567 ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் உதவி எண்களான சட்டவிரோத மது விற்பனை புகார் எண் 10581 பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 கிரைம் உதவி எண்கள் 1930 மேலும் மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் தொடுதல் குறித்த விழிப்புணர்வு (GOOD TOUCH BAD TOUCH) பற்றி கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினர்.
Next Story