கடையநல்லூா் நகராட்சியில் மழைநீா் வடிகால் அமைக்கக் கோரி மனு

கடையநல்லூா் நகராட்சியில் மழைநீா் வடிகால் அமைக்கக் கோரி மனு
X
நகராட்சியில் மழைநீா் வடிகால் அமைக்கக் கோரி மனு
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சியில் மழைநீா் வடிகால் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே. என்.நேருவை சந்தித்து, நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் மனுஅளித்தாா். அதன் விவரம்: பெரிய நகராட்சியான கடையநல்லூரில் தாமிரவருணி மற்றும் உள்ளூா் குடிநீா் திட்டங்கள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே தாமிரவருணி குடிநீா் வழங்கப்பட்டு வந்த நிலையில் நகராட்சியின் 33 வாா்டுகளுக்கும் தாமிரவருணி குடிநீா் வேண்டுமென மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இதுதொடா்பாக, நகா்மன்றத்தின் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று கடையநல்லூா் மற்றும் 493 ஊரக பகுதிகள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீா் திட்டத்தை அறிவித்த அமைச்சருக்கு நன்றி. மேலும், கடையநல்லூா் நகராட்சியில் சாலை வசதி, மழை நீா் வடிகால் வசதி, மின்விளக்கு வசதி போன்றவற்றை செயல்படுத்திட கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மனு அளிக்கும்போது, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், மாவட்டப் பிரதிநிதி பொன் செல்வன் , மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Next Story