கோவை: திறந்திருக்கும் சாக்கடை கால்வாயால் ஆபத்து!

X
கோவை மாநகராட்சி 30-வது வார்டு கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கோபால்சாமி கோவில் தெருவில் சாக்கடை கால்வாயை தூர்வாரும் பணி நடந்தது. கால்வாயை தூர்வாரிய பிறகு அதனை மூடி போடாமல் அப்படியே விட்டுவிட்டார்கள். இதனால் அந்த வழியாக வந்து செல்லும் பள்ளி குழந்தைகள் உள்பட பலரும் தவறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே அந்த சாக்கடை கால்வாயை மூடி போட்டு மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story

