இரண்டு தங்க பதக்கங்கள் பெற்ற நெல்லை வீரர்

X
குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான காதுகேளாதோர் இறகு பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் திருநெல்வேலி மாவட்டம் விகேபுரத்தை சேர்ந்த முகமது ரிபாய் என்பவர் இரண்டு தங்க பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த எஸ்டிபிஐ கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story

