சிவகங்கையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

X
சிவகங்கை உணவுத்துறை அலுவலர் சரவணகுமார், சிவன் கோவில், அரண்மனை வாசல், மஜித்ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பழ ஜூஸ் கடைகள் மற்றும் பழக்கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் அழுகிய நிலையில் இருந்த 200 கிலோ பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சில கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், உணவு பாதுகாப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்
Next Story

