சின்னமனூர் அருகே கட்டிட வேலைக்கு சென்ற கொத்தனார் பலி

X
சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (52).கொத்தனாரான இவர் கடந்த 19-ம் தேதி எரசக்கநாயக்கனூர் பகுதியில் கட்டிட பணிக்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் சாரம் விலகியதில் மாரிமுத்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று (மார்.23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு.
Next Story

