சாலையோரம் நின்ற மரம் விழுந்ததில் வீடு சேதம்

X
குமரி மாவட்டம் கைசூண்டி சந்திப்பில் இருந்து தேங்காப்பட்டணம் ஜங்ஷன் வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் ரோட்டில் இரு ஓரங்களிலும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் இன்ஜினியரிங் கல்லூரி சார்ந்த நாட்டு நலப்படித்தட்டு மாணவர்கள் நட்ட மரங்கள் உள்ளன. ஆனால் ஆண்டுகள் கடந்த பின்னர் இதுவரை சாலையில் பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழுந்து தொடர் விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ரோட்டோரத்தில் ஆபத்தாக இருக்கும் மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று மாலையில் அனந்தமங்கலம் அருகே ரோட்டோரத்தில் நின்ற மரம் திடீரென சரிந்து வீட்டின் மேல் விழுந்தது. வீட்டிலிருந்த கிருஷ்ணன் என்பவரின் தலையின் மேல் ஆஸ்பெட்டாஸ் சீட் உடைந்து விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் வில்சன் என்பவர் கடையின் மேலும் மரம் முறிந்து விழுந்ததில் கடையும் சேதமடைந்தது . இதை கண்ட அப்பகுதியினர் முறிந்து கிடக்கும் மரத்தை அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தும், இழப்பீடு வழங்கக் கேட்டும் புதிய வீடு கட்டி தரட்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு புதுக்கடை இன்ஸ்பெக்டர் மாரியப்பன், கிராம அதிகாரி ஜான் ஜவகர், வருவாய் துறை அதிகாரி விக்னேஷ் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் நிதி வாங்கி தரப்படும் எனவும் புதிய வீடு கட்டு தரப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் மரங்கள் முறித்து அப்புறப்படுத்தும் பணி நடந்தது.
Next Story

