சேலம் அன்னதானப்பட்டியில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

சேலம் அன்னதானப்பட்டியில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
X
நாளை நடக்கிறது
சேலம் தெற்கு கோட்ட அளவில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், அன்னதானப்பட்டியில் உள்ள தெற்கு கோட்ட மின் அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்திற்கு சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். இதில் அந்த பகுதியை சேர்ந்த மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை சேலம் தெற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
Next Story