சைக்கிள் பேரணி மேற்கொள்ளும் படை வீரர்களை வரவேற்று மெரினாவில் கடலோர பாதுகாப்பு விழிப்புணர்வு

சைக்கிள் பேரணி மேற்கொள்ளும் படை வீரர்களை வரவேற்று மெரினாவில் கடலோர பாதுகாப்பு விழிப்புணர்வு
X
சைக்​கிள் பேரணி மேற்​கொள்​ளும் படை வீரர்​களை வரவேற்று மெரி​னா​வில் கடலோர பாது​காப்பு விழிப்​புணர்வு நடத்​தப்​படும் என்று சிஐஎஸ்​எஃப் டிஐஜிக்கள் அருண் சிங், சிவக்குமார் தெரி​வித்​துள்​ளனர்.
சிஐஎஸ்​எஃப் என அழைக்​கப்​படும் மத்திய தொழில் பாது​காப்பு படை அதிகாரி​கள், ‘பாது​காப்​பான கடற்​கரைகள்வளமான பாரதம்’ என்னும் தலைப்​பில் கடலோர சைக்​ளோத்​தான் எனும் சைக்​கிள் பேரணியை கடந்த 7-ம் தேதி ராணிப்​பேட்டை மாவட்​டம் தக்​கோலத்​தில் உள்ள மத்​திய தொழில் பாது​காப்பு படை​யின் ராஜாத்​திய சோழன் மண்டல பயிற்சி மையத்​திலிருந்து தொடங்​கினர். இந்த பேர ணியை மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா தொடங்கி வைத்​தார். 11 மாநிலங்​கள் வழி​யாக.. மேற்கு கடற்​கரை தடத்​தில் குஜ​ராத்​திலிருந்து கன்​னி​யாகுமரி வரை​யிலும், கிழக்கு கடற்​கரை தடத்​தில் மேற்கு வங்​கத்​தில் இருந்து கன்​னி​யாகுமரி வரை​யிலும் 11 மாநிலங்​கள் வழி​யாக மேற்​கொள்ள உள்ள இந்த சைக்​ளோத்​தானில் 14 பெண்​கள் உட்பட 125 மத்​திய தொழில்பாது​காப்பு படை​யினர் கலந்து கொண்டு கடற்​கரையை ஒட்​டிய பாதை​யிலேயே 6,553 கிலோமீட்​டர் 25 நாட்​கள் பயணிக்​கின்​றனர். மீனவர்​களு​டன் இணைந்து: இந்​நிலை​யில் மேற்​கு​வங்​கம் மாநில கிழக்கு கடற்​கரை பகு​தி​யில் இருந்து சைக்​கிள் பேரணி மேற்​கொண்ட மத்​திய தொழில் பாது​காப்பு படை குழு​வினர் நேற்று இரவு சென்னை வந்​துடைந்​தனர். அவர்​களுக்கு இன்று சென்னை மெரினா கடற்​கரை​யில் சிறப்பு வரவேற்பு அளிக்​கப்​பட்டு மாலை 5.30 மணிக்கு மெரினா கடற்​கரை​யில் கடற்​கரை பாது​காப்பு குறித்து மீனவர்​களு​டன் இணைந்து விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகளை மத்​திய தொழில் பாது​காப்பு பணி​யாளர் நடத்த உள்​ளனர். சென்னை விமான நிலைய மத்​திய தொழில் பாது​காப்பு படை டிஐஜிக்கள் அருண் சிங், சிவக்கு​மார் கூட்டாக மீனம்​பாக்​கம் மத்​திய தொழில் பாது​காப்பு படை அலு​வல​கத்​தில் செய்​தி​யாளர்​களை சந்​தித்து மெரினாவில் நடைபெற உள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து விவரித்தனர்.
Next Story