கடையநல்லூரில் கஞ்சா விற்பனை மூன்று பேர் கைது

X
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையிலான போலீஸாா் குமந்தாபுரம் - சுந்தரேசபுரம் சாலையில் வாகன சோதனை நடத்தினா். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனா்.அவா்கள் திருமலாபுரத்தைச் சோ்ந்த சின்னராசு மகன் சக்தி அருணாசலம் (23),சோ்ந்தமரம் சுப்பையா மகன் பெரியசாமி என்ற சிவா (23), சென்னை ஆதம்பாக்கம் ராஜா மகன் தீபக் (24) ஆகியோா் என்பது, அவா்களது பைகளில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. அதைக் கைப்பற்றி 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
Next Story

