வாலாஜா அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

X

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
வாலாஜாவை அடுத்த கத்தாரிக்குப்பம் கிராம பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 70). இவர் வாலாஜா அம்மூர் ரோடு தென்றல் நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது அம்மூர் நோக்கி வேகமாகச் சென்றவரின் மோட்டார்சைக்கிள் மோதியதில் தேவதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வாலாஜா போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.பின்னர் குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story