விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

X
புதுக்கடை அருகே உள்ள சடையன்குழி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (48) தொழிலாளியான இவருக்கு லீமா ரோஸ் என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். மனைவியும் மகளும் சற்று மன வளர்ச்சி குன்றியவர்கள் என கூறப்படுகிறது. இதனால் ராஜேஷுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த சில நாட்களாக ராஜேஷ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ தினம் இவர் வீட்டின் அருகில் உள்ள ஒரு வாழைத்தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி லீமா ரோஸ் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

