மின்சாரம் தாக்கியதில் கூலித் தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கியதில் கூலித் தொழிலாளி பலி
X
மதுரை சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கியதில் கூலித் தொழிலாளி பலியானார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமம் மண்டு கோவில் தெருவில் வசிக்கும் சோனிமுத்து மகன் பிச்சை(55) என்பவர் மேலக்கல் கிராமத்தில் கிராம பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு லட்சுமி, பிச்சையம்மாள் ஆகிய இரண்டு மனைவிகள் நாகஜோதி, நாகமணி, லட்சுமி, முத்துமாரி 4 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் வீட்டின் அருகே காலைக்கடன் கழிக்க சென்றவர் வாழைத்தோப்பில் மின் வயர் அறுந்து விழுந்து கிடந்ததில் கவனக்குறைவாக மின் வயரை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தகவலறிந்து வநது அங்கு வந்த காடுபட்டி காவல்துறையினர் இறந்த பிச்சையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
Next Story