அரசு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

அரசு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
X
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி மண்டலம், கல்லூரி கல்வி இணை இயக்குனர் சிந்தியா செல்வி பங்கேற்று 268 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். இவர் பேசியதாவது: மாணவர்கள் பெறும் கல்வி வெறும் ஏட்டுக்கல்வியாக இல்லாது, ஆக்கபூர்வமாக தனக்கும், தன்னை சார்ந்தோர்களுக்கும் மட்டுமில்லாமல், சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் அறிவை பெருக்கி கொண்டு, சிந்தித்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் பேராசிரியர்கள் ரகுபதி, சரவனாதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story