எஸ்.பி., அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

எஸ்.பி., அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
X
கூட்டம்
கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், 42 பேர் மனுக்களை அளித்தனர்.மாவட்ட போலீஸ் துறையில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீதான நடவடிக்கைகள், தீர்வுகள், முடிவு பெறாத புகார்கள் குறித்த குறைதீர்வு கூட்டம் எஸ்.பி., ரஜத் சதுர்வேதி தலைமையில் நடந்தது. இதில், பொதுமக்களிடமிருந்து 42 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை செய்து உடனடி தீர்வு காண போலீசாரிடம், எஸ்.பி., அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் டி.எஸ்.பி., சரவணன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story