வேளாண்மை கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோரிக்கை.

வேப்பூரில் காவல் நிலையம் அமைத்து தர வேண்டும்
வேளாண்மை கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோரிக்கை. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செல்லதுரை பேசுகையில், எடை மோசடியை தடுக்க எடைமேடைகளை அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், நீர் நிலை புறம்போக்குகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்திற்கு வேளாண்மை கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி கொண்டு வர மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பரிந்துரைக்க வேண்டுமெனவும், வேப்பூரில் காவல் நிலையம் அமைத்து தர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனுக்குடன் பதில் அளிக்க அறிவுறுத்தியதோடு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்குமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அனைத்து துறை அலுவலர்களும் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் விளக்கம் அளித்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல்பிரபு,சார் ஆட்சியர் சு.கோகுல் வேளாண்மை இணை இயக்குநர் செ.பாபு மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story