கோவை: மூதாட்டி கொலை - ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு !

X

ஆதாயத்திற்காக 70 வயது மூதாட்டியை கொலை செய்த கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.
கோவை, தடாகம் பகுதியில் தனியாக வசித்த 70 வயது மூதாட்டியை கடந்த 2021 - ம் ஆண்டு ஆதாயத்திற்காக கொலை செய்த குற்றத்திற்காக கருப்பையா @ வினோத் (25) என்பவர் மீது தடாகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கின் விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை நேற்று முடிவு பெற்று குற்றவாளி கருப்பையா @ வினோத் என்பவருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.1500/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் தமிழரசன் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டினார்.
Next Story