மத்திய அரசை கண்டித்து விருதுநகரில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மத்திய அரசை கண்டித்து விருதுநகரில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
X
மத்திய அரசை கண்டித்து விருதுநகரில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழ்நாட்டில் இந்தி மொழியை மாணவர்கள் கற்றால்தான் ரூ 3000 கோடி நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு சொன்னதை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஏற்கவில்லை எனவும், இந்த கல்விக் கொள்கையால் பள்ளிக் குழந்தைகள் மீது மேலும் சுமையை ஏற்ற விரும்பவில்லை என்று கூறிய ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்று விருதுநகரில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு... விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்திற்காக தமிழ்நாட்டிற்கு நிதியை ஒதுக்காத மத்தியில் ஆளும் ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து திமுக சார்பில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், தமிழ்நாட்டில் ஹிந்தியை கற்றால் தான் கல்விக்கான ரூ 3000 கோடி நிதியை ஒதுக்குவேன் என்று கூறிய ஒன்றிய அரசிடம் நம்முடைய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழக மாணவர்களின் மேல் மேலும் ஒரு சுமையை ஏற்ற நான் விரும்பவில்லை என்று கூறி அந்த நிதியை வேண்டாம் என்று கூறியவர் நம்முடைய முதல்வர் என்றும், மேலும் மத்தியில் பிஜேபி அரசும் ஆளும் மாநிலங்களில் நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது என்றும் ஆனால் பிஜேபி அரசு ஆளாத மாநிலமான நம்முடைய தமிழகத்திற்கு நூறுநாள் வேலைத்திட்டத்திற்காக இதுவரை செலவாகியிருக்கும் ரூ 4034 கோடியை தமிழகத்திற்கு ஒதுக்காமல் தமிழக மக்கள் மீது பாரபட்சம் காட்டுவதாகவும் பேசினார் மேலும் தமிழகத்திற்கு நிதியை ஒதுக்காத ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து தமிழகநிதியமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடந்த இந்த ஆர்பாட்டத்தில் 100 நாள் வேலைதிட்டத்தில் பணிபுரியும் 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்பாட்டத்தின் இறுதியில் ஒன்றிய அரசுக்கு எதிராக உறுதி மொழியையும் எடுத்துக் கொண்டனர்
Next Story