சேலம் அருகே ஊஞ்சல் ஆடியபோது தொட்டில் சேலை கழுத்தை இறுக்கி ன்.

சேலம் அருகே ஊஞ்சல் ஆடியபோது தொட்டில் சேலை கழுத்தை இறுக்கி ன்.
X
7-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்
சேலம் அருகே உள்ள மேட்டுபட்டி தாதனூர் பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன். தனியார் பஸ் டிரைவர். அவருடைய மகன் கவின் ஸ்ரீநாத் (வயது 12). இவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று வீட்டில் சேலையால் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் மாணவன் கவின்ஸ்ரீநாத் ஊஞ்சல் ஆடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அவனுடைய தலை சேலையில் சிக்கியது. இதில் கழுத்து இறுக்கியதில் மாணவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே மாணவன் கவின் ஸ்ரீநாத் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து வீராணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story