நெய்வேலி: பாமக பொறுப்பாளர்கள் கூட்டம்

X
பாட்டாளி மக்கள் கட்சியின் நெய்வேலி தொகுதி ஒன்றிய நகர செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் நெய்வேலி வணிக வளாகத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் தமிழ்நாடு மாநில உழவர் பேரியக்க தலைவர் கோ.ஆலயமணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மே.11 சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டை எவ்வாறு சிறப்பிக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
Next Story

