குடும்ப பிரச்சினை கிராம நிர்வாக உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை

குடும்ப பிரச்சினை கிராம நிர்வாக  உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை
X
குடும்ப பிரச்சினையில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை
காங்கேயம் சத்யா நகரில் வசித்து வந்தவர் சாமிநாதன் (வயது 35) இவர் ஊதியூர், முதலிபாளையம் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். திருமணமாகி அவரது மனைவி மற்றும் குழந்தையை விட்டு கடந்த 3 வருடங்களாக பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த சாமிநாதன் பூச்சி மருந்து (விஷம்) குடித்து காங்கேயம் கரூர் சாலையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story