ஆன்மிக குரு பங்காரு அம்மா அவதார பெருமங்கல விழா!
ஆன்மிக குரு பங்காரு அம்மா அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு பிள்ளையார்நத்தம் கிராமத்தில் விவசாயம் செழிக்க கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் 85வது அவதார பெருமங்கல விழா நடைபெற்றது. ஓம்சக்தி கொடியை குருவிகுளம் சேர்மன் விஜயலெட்சுமி ஏற்றி வைத்தார். மழைவளம் வேண்டியும், தொழில்வளம் சிறக்கவும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வாழவும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. குருபூஜை, வினாயகர் பூஜையுடன் துவங்கிய விழாவில் அறுங்கோண சக்கரம் அமைக்கப்பட்டு முக்கோண வடிவிலான பிரதான யாககுண்டம் அமைக்கப்பட்டு கலச விளக்கு விளக்கு வேள்விபூஜை நடைபெற்றது. வேள்வியை ஆன்மிக இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகளை மாவட்ட மகளிர் அணி தலைவி கே.பத்மாவதி வழங்கினார். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி துவக்கி வைத்தார்.
Next Story



