ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆட்டோ மீது கொரியர் வேன் மோதிய விபத்தில் தந்தை மற்றும் மகள் இருவர் சம்பவ இடத்திலேயே பலி...*

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆட்டோ மீது கொரியர் வேன் மோதிய விபத்தில் தந்தை மற்றும் மகள் இருவர் சம்பவ இடத்திலேயே பலி...*
X
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆட்டோ மீது கொரியர் வேன் மோதிய விபத்தில் தந்தை மற்றும் மகள் இருவர் சம்பவ இடத்திலேயே பலி...*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆட்டோ மீது கொரியர் வேன் மோதிய விபத்தில் தந்தை மற்றும் மகள் இருவர் சம்பவ இடத்திலேயே பலி... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் காலணி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் செல்வம் வயது 46 இவர் தனது மகள் சுமித்ரா வயது 18 என்பவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி படிக்க வைப்பதற்காக மாயத்தேவன் பட்டி விலக்கு அருகே சென்றபோது சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்த கொரியர் வேன் ஆட்டோ மீது பலமாக மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியதில் ஆட்டோ ஓட்டுனர் செல்வம் அவரது மகள் சுமித்ரா சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மல்லி காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அஜாக்கிரதையாக கொரியர் வேனை ஒட்டி வந்த மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த உதயகுமாரை கைது செய்த மல்லி காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.மகளை படிக்க இறக்கிவிட சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அத்திகுளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story