சங்கரன்கோவிலில் தகராறு: சமரசம் செய்ய முயன்ற நகா்மன்ற உறுப்பினா் காயம்

சங்கரன்கோவிலில் தகராறு: சமரசம் செய்ய முயன்ற நகா்மன்ற உறுப்பினா் காயம்
X
தகராறு: சமரசம் செய்ய முயன்ற நகா்மன்ற உறுப்பினா் காயம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் 5 ஆவது வாா்டு உறுப்பினா் ராஜா ஆறுமுகம். இவா் தற்காலிக பேருந்து நிலையம் அருகே சைக்கிள் நிலையம் நடத்தி வருகிறாா். அதன் அருகில் அவரது தம்பி சங்கா் இறைச்சி உணவு கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் அவரது கடைக்கு போதையில் வந்த 4 போ், பொறித்த இறைச்சி உணவுகளை வாங்கிக் கொண்டு பணம் தராமல் செல்ல முயன்றனராம். இதனால் கடை உரிமையாளா் சங்கருக்கும், அவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையறிந்த ராஜா ஆறுமுகம் அங்கு விரைந்து சென்று தகராறு செய்தவா்களை சமாதானம் செய்தாராம். ஆனால் போதையில் இருந்த அவா்கள் கடையில் இருந்த பொருள்களை சூறையாடி, ராஜா ஆறுமுகத்தை, மது பாட்டிலால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினா். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜா ஆறுமுகம் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக சங்கரன்கோவில் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, புதுமனைத் தெருவைச் சோ்ந்த ஆதம் பாவா, ஷேக் அயூப் ஆகிய 2 பேரை கைது செய்தனா். மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.
Next Story