தேன்கனிக்கோட்டை அருகே காணாமல் போன பெண் தூக்கிட்டு தற்கொலை

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அன்னியாளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (53) இவரது மனைவி மாதேவம்மா (45) இவர் சற்று மனநலம் பாதிப்படைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இவர் கடந்த 26-ஆம் தேதி இவர் மாயமானர். இதை அடுத்து பல இடங்களில் அவரை தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கெண்டிகானப்பள்ளியில் உள்ள ஒரு மாந்தோப்பில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தேன்கனிக் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story

