நல்லம்பள்ளியில் ஆடுகள் விற்பனை ஜோர்

நல்லம்பள்ளி செவ்வாய் வாரச்சந்தையில் 45 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.இன்று ஏப்ரல் 01 காலை கூடிய சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் வியாபாரிகள் ஆடுகள் மற்றும் மாடுகளை  விற்க & வாங்க குவிந்தனர். ஆடுகள் அளவை பொறுத்து 3800  ரூபாய்க்கு துவங்கி 25000  ரூபாய் வரை என இன்று ஒரே நாளில் சுமார் 45 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்
Next Story