கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்லை பந்தயம்

கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்லை பந்தயம்
X
திருப்பத்தூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே தேவரம்பூர் கிராம பொதுமக்கள் மற்றும் காட்டாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவ பருந்து இளைஞர்கள் இணைந்து கோவில் திருவிழாவை முன்னிட்டு 2ஆம் ஆண்டு மாபெரும் இரட்டைமாட்டு வண்டி எல்லைப் பந்தயம் நடைபெற்றது. திருப்பத்தூர்- சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் பெரிய மாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெரிய மாட்டு பிரிவில் 19 ஜோடிகளும், 2 சுற்றுகளாக நடைபெற்ற சிறிய மாட்டு பிரிவில் 32 ஜோடிகள் என மொத்தம் 51 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டுக்கு 7கிலோமீட்டர் தொலைவும், சிறிய மாட்டுக்கு 6 கிலோமீட்டர் தொலைவும் பந்தய எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. சீறி பாய்ந்து சென்ற மாட்டுவண்டி போட்டியினை சாலையின் இருபுறங்களில் நின்று திரளான பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்க பரிசும், வெற்றி கோப்பையும் வழங்கப்பட்டது.
Next Story