கடும் வெயிலை சமாளிக்க வெள்ளரியை நாடும் பொதுமக்கள்

X
Komarapalayam King 24x7 |1 April 2025 6:06 PM ISTகுமாரபாளையத்தில் கடும் வெயிலை சமாளிக்க வெள்ளரியை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கடும் வெயிலை சமாளிக்க வெள்ளரியை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். கோடை வெப்பத்தின் தாக்கம் மார்ச் மாதம் முதலாக தொடங்கி, பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சாலைகளில் நடமாட அஞ்சி வருகின்றனர். இதனால் வெள்ளரிகாய் சூட்டை தணிக்கும் என்பதால், அதிக அளவில் பொதுமக்கள் வெள்ளரிக்காய்களை வாங்கி வருகின்றனர். இது பற்றி வியாபாரி விஸ்வநாதன் கூறியதாவது: வெள்ளரிக்காய் வெப்பத்திற்கு மட்டும் இல்லாமல் ஆஸ்துமா போன்ற வைத்தியத்திற்கும் பயன்படுவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் இதனை வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
