சுங்கச்சாவடியில் கட்டணத்தை குறைக்க கோரி வாகன ஓட்டிகள் கோரிக்கை
திருவள்ளூர்- தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் பட்டரைப்பெரும்புதூர் சுங்கச்சாவடியில் கனரக வாகனங்களுக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பதால் கட்டணத்தை குறைக்க கோரி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தமிழ்நாட்டில் 1992- 2008 போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர், ஏப்ரல் முதல் ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது, அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகள் 40 சுங்கச்சாவடியில் இன்று நள்ளிரவு முதல் கட்டன உயர்வு அமலுக்கு வந்தது திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 2015 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் பட்டரை பெரும்புதூர் சுங்கச்சாவடியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கட்டண உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது, இந்த சுங்கச்சாவடியில் கார் மினி வேன் தவிர்த்து பேருந்துகள் கனராக வாகனங்களுக்கு பத்து ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது இதனால் காய்கறிகள் கொண்டு செல்லும் சரக்கு வாகனம் லாரிகள் பேருந்துகளுக்கு பத்து ரூபாய் கட்டணம் உயர்ந்துள்ளது, இந்த சுங்கச்சாவடியில் பேருந்துக்கு ஏற்கனவே 135 ரூபாய் இருந்தா கட்டணம் 140 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது அதேபோன்று கனரா வாகனங்கள் 210 இருந்து 220 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது அதிக பாரங்கள் கொண்டுவரும் வாகனங்களுக்கு 260 இருந்து 265 ரூபாய் உயர்ந்திருப்பதால் ஏற்கனவே பெட்ரோல் டீசல் உயர்த்தப்பட்டு இருப்பதால் விலைவாசிகள் பொருட்களும் உயர்ந்த நிலையில் இருக்கும் நிலையில் மேலும் சுங்க கட்டணம் உயர்த்திருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத சூழ்நிலை உருவாகும் கட்டணத்தை குறைத்திட வேண்டும் என வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர், அதேபோன்று தனியார் பேருந்து ஏற்கனவே வங்கியில் கடன் பெற்று இயக்கி வரும் நிலையில் சுங்க கட்டணம் உயர்வால் மிக சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் தொழில் நடத்த முடியாத சூழ்நிலை உருவாக கூடும் என்பதால் ஒன்றிய அரசு கட்டணத்தை குறைக்க வேண்டும் என தனியார் பேருந்து வாகன உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story







