ஆபத்து பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

X
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி, கொண்டாநகரம் ஆகிய சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமத்திலிருந்து வரும் மாணவர்கள் நெல்லையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கொண்டாநகரத்தில் இருந்து நெல்லை சந்திப்பு நோக்கி சென்ற அரசு பேருந்தில் மாணவர்கள் ஆபத்தை உணராமல் படியில் நின்று பயணம் செய்து வருகின்றனர். இதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story

